எங்கே நீ நண்பா..
கிழக்கில் சூரியன் அன்றுஅழுது கொண்டே எழுந்ததுஈழ மண் எரிந்து கொண்டிருந்தகணப் பொழுது அந்தச்சூரியன் கண்ணைஅழ வைத்திருக்கலாம்தான் தினமும் காணும்தன் மக்கள் வீடற்றுஏதிலிகளாக வீதியெங்கும்அடித்து துரத்தப்படுவதை கண்டுவிழி கலங்கியிருக்கலாம்.பொங்கலிட்டு தன்னை பசியாற்றும்தன் நேசத்துக்குரியவர்கள்கொன்று குதறப்படுவதுநீரை...
ரோஜா முள்ளா நீ… ?
நான் இன்னும் சாகவில்லை
காலவோட்டத்தின் அலையில்
அடிபட்ட துரும்பாக
அலைபட்டு ஓடிக் கொண்டே
இருக்கிறேன்
எனது ஓட்டத்தின்
எல்லைக் கோடு எதுவென்று
தெரியவில்லை
ஆனாலும் ஓடுகிறேன்…
அதிகாலை விழி திறக்கும்
மணிக்கூண்டின் சத்தத்துக்கும்
இரவு வணக்கம் சொல்லும்...
செங்காந்தள்
செங்களம் ஆடி வீழ்ந்த - எம்
செந்தமிழ் வீரர் நினைவுகள் பவனிவர
செங்கம்பளம் விரிக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!
செம்மொழியாம் எம்மொழியாலும்
செப்பிட முடியா பரம்பொருளை
செவ்விதின் உரைக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!
(செவ்விதின் -செம்மையாக)
போராளி மருத்துவர்: தணிகை
மாலதி எனும் பெருந் தீ
மாலதி ! மானத் தமிழ் மறத்தி மாண்டு போகா வீரத் தீ பாரதி பாட்டிலே வடித்த தீ பிரபாகரன் தீரத்தில் தீட்டிய தீ மடந்தையர் மடமைகள் எரித்த ...
தங்கைக்கு ஓர் வாழ்த்து…
அன்புத் தங்கைக்கு...!
எதை எழுத
கேள்விகள் மனதில் தோன்றி
பேனாமுனை கிறுக்கி
கொண்டே இருக்கிறது
அவை எழுத்துக்கள் அல்ல
வெற்றுக் கோடுகள்
உற்று நோக்கினேன்
கோடுகள் நீயாக இருந்தன
உன்னை எப்படி எழுத
என்றெழும் நீரில் கண்கள்
நனைந்த போதும் அவற்றில்
நினைவுகள் கிறுக்கலானது
உன்னை எழுத முடியவில்லை
வார்த்தையை தேடித் தேடி
தேனெடுக்கும்...
புலம் பெயர் நாட்டில் ஒரு தாய்….
அப்பனைத் தவறவிட்டான்அசுரர்களால் அன்பையும்தொலைத்துவிட்டான் இப்போதெல்லாம் அவன்அழகான வாழ்வாக ஒன்றைமட்டும் மிச்சம் கொண்டான்
இருமிக் களைத்துச் சோர்ந்து போகும் பெற்றவளை அயராது உழைத்தாலும் கண்ணுக்கள் சுமந்து நிற்பான் மருந்தும் மாத்திரையும்மூச்சோடு கலக்க என்று ஒரு குப்பி காற்றழுத்தி
கொஞ்ச நாட்களாக இப்படித்தான் கழிந்தது அவர்களின் அன்பான வாழ்நாள்கள். அன்றொருநாள் அவசர வைத்திய...
முள்ளிவாய்க்கால் முடிவல்ல
நந்திக்கடலும் வட்டுவாகலும்நொந்துபோய் கிடக்கிறது வலி சுமந்த அடிமனதோடு…
பிஞ்சும் பூவும்
காயும் கனியுமாய்
சிந்திய இரத்தம்
காயாமலே
சிவந்தது தாய் முற்றம்
இரத்தமும் சதையும்
சேற்றுச்சகதியாய் மாற
மூச்சுக்காற்று தேடி
முனகியது வாழ்வு
காலின் கீழ் ஒட்டி பிசுபிசுத்தது
காயாமல் சுட்ட இரத்தம்…
யாரதென்று தீர்மானிக்க
இப்போது...
நிலவானவளின் நினைவுகள்
…
உன் வாசம் நிறைந்து
என் தேகம் சுமந்த
இனிய நினைவு ஒன்று
இன்றும் என்னோடு
பயணிக்கிறது…
காதலியாய் காத்திருந்த
வாழ்வைத் தூக்கி வீசிய
ஈழ வேலியின் காவல்ப்பூவே
உன்னை விட நெஞ்சமர்ந்து
என்னைத்...
நாமும் மனிதரே…!
வானம் முழுக்க மழை மேகம் நிலம் நிறைந்த ஈரம் - ஆனால் நாங்கள் நா நனைக்க நீரின்றி கிடக்கிறோம்
தேன் குடிக்கும் ஈக்கள் கூட்டம் ஊர் முழுக்க மொய்த்து கிடக்கஉயிர் வாழ தீனி கேட்டு - உரிமைக்காய் இறைஞ்சி கிடக்கிறோம்
எங்கள்...